தோகைமலை அருகே அனுமதியின்றி பெட்டி கடையில் மதுபானம் விற்ற 3 பேர் கைது

தோகைமலை, டிச.2: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கல்லடையை சேர்ந்தவர் ராமலிங்கம்(45). கொசூர் ஊராட்சி கம்புளியாம்பட்டி பழனியப்பன் மனைவி ராசம்மாள்(55). கீரனூர் ஊராட்சி ஊமைஉடையானூரை சேர்ந்தவர் காமராஜ்(50). இவர்கள் மூவரும் தங்களது பெட்டி கடையில் அனுமதியின்றி மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து உள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தோகைமலை போலீசார் பெட்டி கடைகளில் சோதனை நடத்தினர்.

பின்னர் ராமலிங்கம், ராசம்மாள், காமராஜ் ஆகியோர் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்து இருந்த மதுபானங்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: