டூவீலரை திருடிய சிறுவன் கைது 2 பேருக்கு வலை

சேலம், டிச.2: சேலம் 3 ரோடு அருகே ஜவகர் மில் பகுதியில், நேற்று முன்தினம் இரவு 3 பேர், ஒரு டூவீலரை தள்ளிக்கொண்டு சென்றனர். அப்போது, அந்த பகுதியில் ரோந்து சென்ற போலீசாரை பார்த்ததும் 2 பேர் தப்பியோடி விட்டனர். இதையடுத்து டூவீலருடன் வந்த 17 வயது சிறுவனை, போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவன் தள்ளிக்கொண்டு வந்தது திருட்டு டூவீலர் என தெரிந்தது. இதையடுத்து அவனை காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அப்போது சிறுவன் கொடுத்த தகவலின் பேரில் 2 திருட்டு டூவீலர்கள் மீட்கப்பட்டது. தொடர்ந்து சிறுவனை கைது செய்த போலீசார், அவனது கூட்டாளிகளான சொலுசன்ராஜா, தர்மன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related Stories: