ஆத்தூர், டிச.2: ஏத்தாப்பூர் டாஸ்மாக் கடை சூபர்வைசரை தாக்கி ₹6 லட்சம் கொள்ளையடித்த வழக்கில், கோவை சிறையில் இருந்த 3பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் பேரூராட்சியில் டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளராக பணியாற்றுபவர் மோகன்(48). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி இரவு, கடையை பூட்டி விட்டு, அன்று மது விற்பனையான பணம் ₹6லட்சத்தை எடுத்து கொண்டு, டூவீலரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ஏத்தாப்பூர் வசிஷ்ட நதி பாலத்தின் அருகே வந்த போது, எதிரே வந்த மர்ம நபர்கள் அவரை தாக்கி விட்டு, டூவீலரில் வைத்திருந்த ₹6 லட்சத்தை பறித்துச் சென்றனர். இது குறித்து, மோகன் கொடுத்த புகாரின் பேரில், ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.