உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் விருப்ப மனுக்கள்

தர்மபுரி, டிச.2: தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சி வார்டுகளில் போட்டியிட விரும்பும் மாவட்ட காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி, நேற்று கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு தலைமை வகித்து, விருப்ப மனுக்களை பெற்றார். நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சித்தையன், தர்மபுரி நகர தலைவர் செந்தில்குமார், வட்டாரத் தலைவர் வேலன், நகர துணைத்தலைவர் மோகன்குமார் ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: