கோவை, டிச. 2: கோவையில் பெண்ணை தாக்கி கார் கண்ணாடியை உடைத்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை கணபதி சத்தி மெயின்ரோட்டை சேர்ந்தவர் குட்டை செந்தில் (எ) செந்தில்குமார்(38). கார் டிரைவர். இவரது மனைவி அம்சவேணி (38). செந்தில்குமார் மற்றும் அவரது நண்பர் சுதாகர் (31) ஆகியோர் மீது சரவணம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. இந்நிலையில், சுதாகரிடம், செந்தில்குமார் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவத்தன்று பணம் கேட்பதற்காக சுதாகர் தனது நண்பர்கள் சிலருடன் செந்தில்குமார் வீட்டுக்கு சென்றார். அப்போது அவர் அங்கு இல்லை. மனைவி அம்சவேணி மட்டும் இருந்தார். அவரிடம் சுதாகர் பணம் கேட்டு தகராறு செய்தார். அதற்கு அம்சவேணி தனது கணவர் வெளியில் சென்றுவிட்டார். வந்தவுடன் பணம் தருவதாக தெரிவித்துள்ளார்.