சென்னை: சுயதொழில் தொடங்க விருப்பம் உள்ள பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர்கள், தாட்கோ திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாவட்டத்தில் வசிக்கும் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினத்தவர் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம் உள்ளிட்ட பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பயனடைய தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18 முதல் 65 வயது வரை உள்ளவர்கள் மற்றும் குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு 2 லட்சம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.