பூந்தமல்லி: வீட்டின் எதிரே வாகனம் நிறுத்தியதால் ஏற்பட்ட தகராறில் டிரைவரின் மண்டையை உடைத்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் பாபு (எ) செல்வம் (34), டிரைவர். இவரது வீட்டின் எதிரே கடந்த ஒரு வாரமாக ஒரு வேன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனை நேற்று முன்தினம் இரவு ஒருவர் எடுக்க வந்தார். அப்போது, வீட்டின் எதிரே எதற்கு இத்தனை நாட்கள் வேனை நிறுத்தி வைத்தீர்கள் என பாபு கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.