ராமநாதபுரம், டிச.1: ராமநாதபுரத்தில் நடந்த இரட்டை கொலையில் தொடர்புடைய குற்றவாளி மலேசியாவில் இருந்து திரும்பியபோது கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷனில் 2018 அக்.16ல் ஜாமீன் கையெழுத்திட்டு திரும்பிய வாலாந்தரவை கார்த்திக், விக்னேஷ் பிரபு ஆகியோர் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக, அம்மன் கோவில் குடியிருப்பு சந்திரன் உள்ளிட்டோர் மீது கேணிக்கரை போலீசார் வழக்கு பதிந்தனர். இவ்வழக்கின் முதல் குற்றவாளியான சந்திரன் வெளிநாடு தப்பிச்சென்றார்.