புதிய கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு

திருமங்கலம், டிச. 1: திருமங்கலத்தில் உள்ள மதுரை ரோட்டில் ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்பில் புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் அருகே கோட்டாட்சியர் குடியிருப்பும் அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவிற்கு தயாராகி வரும் நிலையில் திருமங்கலம் புதிய கோட்டாட்சியர் அலுவலகத்தை நேற்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் எம்.எல்.ஏ பார்வையிட்டார். பின்னர் உச்சப்பட்டி துணைகோள் நகரத்தில் நடைபெறும் பணிகளையும் பார்வையிட்டார். இது குறித்து நிருபர்களிடம் கூறுகையில், ‘திருமங்கலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், உச்சப்பட்டி துணைகோள் நகரபணிகளை விரைவுபடுத்தி முடிக்கவும், மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், ஒன்றியச் செயலாளர்கள் அன்பழகன், மகாலிங்கம் யூனியன் சேர்மன் லதாஜெகன், ஜெயலலிதா பேரவை செயலாளர் தமிழழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: