வேன் மோதி மாணவர் பலி

திருமங்கலம் அடுத்த செக்காணூரணியை சேர்ந்தவர் கண்ணன் மகன் பிரவீன்குகன் (17). பிளஸ் 1 மாணவர். இவர், நேற்று மாலை டூவீலரில் தேன்கல்பட்டி அருகே சென்ற போது பழுதாகி நின்ற தபால் வேனில் மோதினார். இதில் படுகாயம் அடைந்த மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார். செக்காணூரணி போலீசார் உடலை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: