திருச்சி, ஏப். 23: ரங்கம் பஞ்சக்கரை சுண்ணாம்பு காளவாய் பகுதியை சேர்ந்தவர் வடமலை (35). இவரது வீடு அருகே அமர்ந்து 3 பேர் மது குடித்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த வடமலை, இங்கு அமர்ந்து மது குடிக்கலாமா என கேட்டு திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் வடமலையை சரமாரியாக தாக்கிவிட்டு ஓடினர். இதுகுறித்த புகாரின்பேரில் ரங்கம் எஸ்ஐ சிவசுப்ரமணியன் வழக்குபதிந்து திருச்சி உறையூர் எழில் நகரை சேர்ந்த நவீன்குமார் (26) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பியோடிய உறையூர் சூரி (எ) சூரியகுமார் (35), புத்தூர் மந்தையை சேர்ந்த கார்த்தி (27) ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.