இரவு நேர ஊரடங்கை மீறிய 15 பேர் மீது வழக்கு பதிவு

திருப்பூர், ஏப்.23: கொரோனா இரவு நேர ஊரடங்கால் திருப்பூர் மாநகரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் குமரன் ரோடு, பழைய, புதிய பஸ் நிலையங்கள் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மாநகரின்  சில பகுதிகளில் ஊரடங்கு விதிகளை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்த 15 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் அபராதம் விதித்தனர். அத்தியாவசிய தேவைக்காக வந்தவர்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வந்த வாகனங்கள் மட்டுமே அனுமதித்தனர். போக்குவரத்தை தடை செய்யும் வகையில் காலேஜ் ரோடு உள்ளிட்ட முக்கிய ரோடுகள் இரும்பு டிவைடர்களை கொண்டு அடைக்கப்பட்டன. ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Related Stories: