பணம், நகை திருட்டு

சிவகாசி, மார்ச் 24: சிவகாசி நகர் ஏ.வி.டி நடுத்தெருவை சேர்ந்தவர் பத்ருபாலன்(37). இவர் தனக்கு சொந்தமான நகைகளை கடந்த அக்டோபர் 2019ல் அருகிலுள்ள தனது தாயாரின் வீட்டின் மாடி அறையிலுள்ள பீரோவில் வைத்திருந்தார். இந்நிலையில் மாடி கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த ரூ.1 லட்சம் மதிப்புடைய குழந்தைகளின் மோதிரங்கள், வளையல்கள், தங்கக்காசு மற்றும் ரூ.24 ஆயிரம் திருடு போயிருந்தது. இது குறித்து பத்ருபாலன் சிவகாசி நீதித்துறை நடுவர் மன்றம் 1 ல் மனு கொடுத்திருந்தார். நீதிமன்ற உத்தரவு படி சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: