காரைக்குடி, மார்ச் 24: தமிழ்நாடு பேட்மிட்டன் அசோசியேசன் சார்பில் நடந்த மாநில அளவிலான பேட்மிட்டன் போட்டியில், காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி மாணவர் அஸ்வின்லெனின் முத்துராஜ் 15வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடம்பெற்றுள்ளார். இப்பள்ளி மாணவி சானியா சிக்கந்தர் 17 மற்றும் 18 வயதிற்குட்பட்ட இரட்டையர் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார். இதில் தேர்வு பெற்ற மாணவர்கள் சாம்பியன் சிப் போட்டியில் விளையாடி அதில் தேர்வாகும் பட்சதில் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ளலாம்.