நாமக்கல், ஏப்.23:நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 223 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் வேகம் அதிகரித்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் பல்வேறு ஊர்களை சேர்ந்த 223 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது. 77 பேர் நேற்று கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,211 பேர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் 27 இடங்களில் நேற்று போலீசார், பொதுமக்களை நிறுத்தி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அறிவுரை வழங்கினார்கள்.
சேந்தமங்கலம் அடுத்துள்ள காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சியில், வெட்டுக்காடு செல்லும் சாலையில் வாரந்தோறும் வியாழக்கிழமை சந்தை கூடுவது வழக்கம். சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள், சந்தையில் கடை போட்டு காய்கறிகளை விற்பனை செய்து வந்தனர்.