முக்காணி அருகே குடும்ப தகராறில் தீக்குளித்த தொழிலாளி சாவு

ஆறுமுகநேரி, ஏப். 23: முக்காணி அருகே குடும்ப தகராறில் தீக்குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ஆறுமுகநேரி அடுத்த முக்காணி அருகே ஜெயராமச்சந்திரபுரத்தை சேர்ந்த செல்லத்துரை மகன் சிவன்ராஜ் (47). இவரது மனைவி பஞ்சவர்ணம். தம்பதிக்கு லோகேஷ், ஆகாஷ் என இரு மகன்கள். தூத்துக்குடியில் தனியார் உப்பு அரைக்கும் கம்பெனியில் கூலி வேலை  பார்த்து வந்த இவர் மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளானார். மேலும் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்துவந்தாராம். இதை மனைவி கண்டித்தபோது தற்கொலை செய்துவிடுவேன் என மிரட்டியும் வந்தாராம்.  இதே போல் கடந்த 18ம் தேதி இரவு 9.45 மணிக்கு வீடடில் தகராறில் ஈடுபட்ட சிவன்ராஜ், குடும்பத்தாரை பயமுறுத்துவதற்காக தனது காலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். பின்னர் இதனால் ஏற்பட்ட வேதனையை தாங்கமுடியாமல் அலறினார். இதை கேட்டு விரைந்துவந்த உறவினர்கள், பலத்த தீக்காயமடைந்த அவரை மீட்டு  தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 2.30 மணியளவில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது அண்ணன் தங்கராஜ் (52) கொடுத்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: