×

செவிலியர் தூக்கிட்டு தற்கொலை

உத்தமபாளையம், ஏப். 20: உத்தமபாளையம் அருகே, க.புதுப்பட்டியில் உள்ள சொஸைட்டி தெருவைச் சேர்ந்தவர் கொடிராமன் மகள் சுகப்பிரியா (22). இவர் நர்சிங் முடித்துள்ளார். உசிலம்பட்டி மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளன. ஆனால், அவருக்கு தற்போது திருமணம் செய்ய விருப்பமில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், விரக்தியில் இருந்த சுகப்பிரியா நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலின்பேரில், உத்தமபாளையம் போலீசார் சுகப்பிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். செவிலியரின் தற்கொலைக்கான காரணம் குறித்து உத்தமபாளையம் எஸ்.ஐ. தினகரபாண்டியன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags :
× RELATED பைக் மீது லாரி மோதி பெண் உயிரிழப்பு