பொன்னமராவதி, ஏப்.20: பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி போட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஊராட்சி தலைவர்கள் மற்றும் செயலர்கள் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கான கொரோனோ தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஒன்றிய ஆணையர் வெங்கடேசன் தலைமை வகித்தார். ஊராட்சிகள் ஆணையர் ரவி முன்னிலை வகித்தார். காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் நிர்மல் கொரோனோ தடுப்பூசியின் அவசியம், கொரோனோ முன்தடுப்பு முறைகள் குறித்து விளக்கிக்கூறினார்.