புழல்: சோழவரம் அருகே மருத்துவமனைக்கு செல்லாமல் உறவினர்களே பிரசவம் பார்த்ததால் தாயும், சிசுவும் பரிதாபமாக இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சோழவரம் அடுத்த புதிய எருமை வெட்டிப்பாளையம் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த 30 குடும்பத்தினர் அங்கேயே தங்கி வேலை செய்து வருகின்றனர். இதில், கோபு என்பவரின் மனைவி பூஜா (20) நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். பாடியநல்லுார் ஆரம்ப சுகதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த பூஜா, பயத்தில் கடந்த 18ம் தேதி காலை மருத்துவர்களிடம் தெரிவிக்காமல், அங்கிருந்து வெளியேறி, செங்சூல் சூளைக்கு திரும்பி உள்ளார். வீடு திரும்பிய பூஜாவிற்கு, அன்றைய தினம் இரவு கடுமயைான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மேலும் வலி அதிகரித்து ரத்தப் போக்கு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு செல்லாமல் உடன் இருந்தவர்களே பிரசவம் பார்த்துள்ளனர்.