மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணியுடன் நிறுத்தம்

சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு உள்ளே வரும் பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். உள் நுழையும்போது பயணிகள் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். தமிழக அரசின் உத்தரவுகளை பின்பற்றி இரவு 11 மணி வரை இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில் சேவை, 20ம் தேதி (இன்று) முதல் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இயக்கப்படும். கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்கள் 5 மற்றும் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என இயக்கப்படும்.

Related Stories: