சூதாடிய 5 பேர் கைது பைக்குகள் பறிமுதல்

திருச்செந்தூர், ஏப். 20: குரும்பூர் அருகே  சூதாடிய  5 பேரை  போலீசார் கைது செய்தனர். குரும்பூர் எஸ்ஐ தாமஸ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது காரவிளை வாழைத்தோப்பு பகுதியில், குரும்பூரை சேர்ந்த மெர்லின் (42), கென்னடி (54), பத்திநாதன் (48), ராஜங்கபுரத்தை சேர்ந்த உதய குமார் (37), ராஜபதியை சேர்ந்த சுரேஷ் ஆகிய 5 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து குரும்பூர் எஸ்ஐ தாமஸ் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து ரூ. 7,300, 6 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: