தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி, ஏப்.20:பர்கூரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் தேவராஜ் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் கண்ணு, மாவட்டக்குழு தீர்மானங்களை விளக்கி பேசினார். இதில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களும் திரும்ப பெற வேண்டும். இரவு நேரங்களில் விவசாயிகளின் ஆடு, மாடுகள் தொடர்ந்து திருடு போவது குறித்து பாதிக்கப்பட்டோர் புகார் கொடுத்தாலும், காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட் விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். பர்கூர் பகுதியில் மா விளைச்சல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். எண்ணேகொல் கால்வாய் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், வட்ட செயலாளர் முனிசாமி, விவசாய தொழிலாளர் சங்க வட்ட பொருளாளர் பவுன்ராஜ், வட்ட தலைவர் திருப்பதி, செயலாளர் குணசேகரன், இளைஞர் மன்ற வட்ட செயலாளர் ரஜினி மற்றும் வட்டக்குழு உறுப்பினர்கள் மாரியப்பன், சீனிவாசன், மணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சென்னையன் நன்றி கூறினார்.

Related Stories: