மன்னார்குடி, ஏப்.19: கோட்டூர் அருகே மகளின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் அடுத்த கோட்டூர் அருகே பெருகவாழ்ந்தான் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (42). இவர் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சுமதி(37) என்ற மனைவியும், பிரியா(21), சத்யப்பிரியா(19) என்ற 2 மகள்களும் உள்ளனர். இதில் பிரியாவிற்கு திருமணம் ஆகிவிட்டது. மது குடிக்கும் பழக்கம் உள்ள செல்வராஜ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதால் உடலநலம் சரியில்லாத சுமதி தனது மகள் சத்யப்பிரியாவுடன் அருகில் வேறொரு வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், சத்யப்பிரியாவுக்கு திருமணம் செய்து வைக்க சுமதி மற்றும் அவரது உறவினர்கள் ஏற்பாடு செய்து வந்தனர். நேற்று மாப்பிளை வீட்டார் பெண் பார்க்க வருவதாக இருந்தது. தனக்கு தெரியாமல் திருமண ஏற்பாடு நடப்பதை அறிந்த செல்வராஜ், மனைவி மற்றும் மகள் மீது கடும் கோபத்தில் இருந்தாக கூறப் படுகிறது. நேற்று முன்தினம் சத்யப்பிரியா தனது தந்தை வசிக்கும் வீட்டிற்கு ரேஷன் கார்டை எடுக்க வந்தார். அப்போது இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ், பெற்ற மகள் என்று பாராமல் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மகளின் கழுத்தை அறுத்தார்.