திருமயம். ஏப்.19: திருமயம் அருகே உள்ள கடியாபட்டி பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று வருவதாக கூறிச்சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திருமயம் போலீசில் புகார் செய்தனர். புகாரில் கடியாபட்டி பகுதியைச் சேர்ந்த விஸ்வா (21) என்ற வாலிபர் ஆசை வார்த்தை கூறி தனது மகளை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகித்து மனுவில் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் போலீசார் தலைமறைவாக உள்ள வாலிபர் மற்றும் மாணவியை தேடி வருகின்றனர்.