×

கொரோனா தடுப்பு விதிமீறி மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்

திருப்பூர், ஏப். 19: திருப்பூர், பல்லடம் ரோட்டிலுள்ள தென்னம்பாளையம், மீன்மார்க்கெட்டில்  கொரோனா தடுப்பு விதிமீறி நேற்று பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. திருப்பூர், பல்லடம் ரோட்டில், தென்னம்பாளையம் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன்மார்க்கெட்டில் மீன்களை வாங்க திருப்பூர், வெள்ளியங்காடு, பட்டுக்கோட்டையார் நகர், காட்டுவளவு, பெரியார்நகர், திருவிக நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சில்லரை வியாபாரிகள் தினசரி வந்து மீன்களை வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு விதிமீறி ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் மீன்கள் வாங்க அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனர். இவர்களை கட்டுப்படுத்த போலீசார் சுகாதாரத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Tags :
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா