தூய்மை பணியாளர் தற்தொலை

உத்தமபாளையம், ஏப். 19:உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தரதேவன் (47). மனைவி பூங்கொடி (வயது 39). இவர் தேனியில் தற்காலிக தூய்மை பணியாளராக உள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்னையால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த சுந்தரதேவன், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: