×

கொரோனா பாதிப்பு குறைய இப்தார் நோன்பில் சிறப்பு தொழுகை

பரமக்குடி, ஏப்.19: பரமக்குடியில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடைபெற்ற இப்தார் நோன்பில், கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காக்க சிறப்பு தொழுகை நடைபெற்றது. பரமக்குடி கீழே முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில், முஸ்லிம் ஜமாத் சார்பாக, ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தாளாளர் சாதிக்பாட்சா தலைமை தாங்கினார். கீழ முஸ்ஸீம் ஜமாத்சபை தலைவர் ரபி அகமது, பொருளாளர் முஹம்மது உமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் அஜ்மல்கான் வரவேற்றார். இதில், கீழ முஸ்ஸீம் பள்ளிவாசல் இமாம் ஜமாலுதீன் ஆஸ்மா, சிறுவர் இல்ல இமாம் பீர் முகமது ஆகியோர் நோன்பு குறித்து விளக்கி பேசினர். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவிலிருந்து பொதுமக்கள் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கவும், உலக அமைதி வேண்டி சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், ஜமாத் சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமையாசிரியர் புரோஸ்கான் நன்றி கூறினார்.

Tags : Iftar ,
× RELATED ஒரே மேடையில் பாஜ கூட்டணி தலைவர்கள் தமாகா இப்தார் நோன்பு திறப்பு