×

முத்தையாபுரம் அருகே காவலாளியை தாக்கியவர்கள் மீது வழக்கு

ஸ்பிக்நகர், ஏப்.19:  முத்தையாபுரம் அருகே  பெரியசாமி நகரை சேர்ந்தவர் பூமிநாதன்(60). இவர் முத்தையாபுரம் பகுதியில் உள்ள குடோனில் காவலாளியாக  வேலைசெய்து வருகிறார். சம்பவத்தன்று குடோன் அருகே சரக்கு ஏற்றிய லாரியை நிறுத்திய டிரைவர்கள் வாகனத்துக்கு தார்பாய் போட்டுகொண்டிருந்தனர்.   காவலாளி பூமி நாதன்  வேறுபகுதிக்கு சென்று தார்ப்பாய் போடுமாறு கூறினார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த லாரி டிரைவர்கள்  மணிகண்டன், ஆசைதம்பி உள்ளிட்ட 3பேர் சேர்ந்து  பூமிநாதனை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Muthiahpuram ,
× RELATED முத்தையாபுரம் அருகே கார் மோதி 2பேர் படுகாயம்