சேலம், ஏப்.19:சேலத்தில் கொரோனா நோய் தொற்று தீவிரமாகி வருவதால், தடை செய்யப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாநகர பகுதிகளில் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. நாள்தோறும் 100க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, 3க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட பகுதிகளை தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு தகர ஷீட்டால் மூடப்பட்டு வருகிறது. மாநகரில் இதுவரை 25க்கும் மேற்பட்ட இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு பேனர் கட்டப்பட்டு, வெளிநபர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.