×

டூவீலர்கள் மோதி இன்ஜினியர் பலி

சேந்தமங்கலம், ஏப்.19: புதுச்சத்திரம் அருகே, டூவீலர்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்ட விபத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பலியானார். மேலும் தம்பதி படுகாயமடைந்தனர். நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் கணேசன்(30), சாப்ட்வேர் இன்ஜினியர். இவருக்கு நித்யா(28) என்ற மனைவியும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. நேற்று மதியம், கணேசன் தனது டூவீலரில் நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், பாச்சல் பகுதியை சேர்ந்த அன்பழகன், சுமதி தம்பதியினர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு டூவீலரில் சுகாதார நிலையத்தை விட்டு வெளியே வந்தனர்.

அப்போது தேசிய நெடுஞ்சாலையில் கணேசன், அன்பழகன் வந்த இரு டூவீலர்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட கணேசன் தலையில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த அன்பழகன், சுமதி தம்பதியினரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேசன் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED எக்ஸல் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா