மனநலம் பாதித்த பெண் தற்கொலை

கிருஷ்ணகிரி, ஏப்.19: குருபரப்பள்ளி அருகே மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி நீலா(27). மனநலம் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 6 மாதங்களாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், வீட்டிற்கு வந்திருந்த நீலா, நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: