போச்சம்பள்ளி, ஏப்.19: போச்சம்பள்ளி, மத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பகலில் வெயிலும், இரவில் பரவலாக நல்ல மழையும் பெய்து வருகிறது. பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், இரவில் மழை பெய்வதால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இந்த மழையின் காரணமாக விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.