115 பேருக்கு கொரோனா

தர்மபுரி, ஏப்.19: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 115 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 7,663 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6,920பேர் குணமாகி வீட்டிற்கு திரும்பி சென்றனர். நேற்று 74பேர் குணமாகி வீட்டிற்கு சென்றனர். மொத்தம் 686பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 57பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

Related Stories: