கரூர், ஏப்.18: கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் அதிகபட்சமாக 46 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு கொரோ னா பரவலை முன்னிட்டு மார்ச் 24ம்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து மூன்று மாதங்கள் கடுமையான அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, படிப்படியாக கொரோனா தொற்று குறைந்த நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.கரூர் அரசு மருத்துவமனையில் கரூர், திண்டுக்கல், திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்ட பகுதிகளில் இருந்தும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தன. முற்றிலும் கொரோனா தொற்று குறைந்த நிலையில், மக்கள் கொரோனாவை மறந்து பழைய வாழ்க்கைக்கு திரும்பினர்.