கார் மோதி தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி, ஏப்.18: குருபரப்பள்ளி அருகே ஜிங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகபூப்(53). கூலி தொழிலாளியான இவர், கடந்த 15ம் தேதி இரவு கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சோமநாதபுரம் அருகே  நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த கார், மகபூப் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரில், குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகபூப் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஒரு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: