விழுப்புரம், ஏப். 18: விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற என்எல்சி ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் வஉசி அரசு ஊழியர் நகரை சேர்ந்தவர் மதியழகன் (63), ஓய்வு பெற்ற என்எல்சி ஊழியர். இவர் கடந்த 3ம் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊரான ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள வல்லம் கிராமத்திற்கு சென்றார். பின்னர் நேற்று அவர் வீடு திரும்பிய நிலையில், வீட்டின் முன்பக்க கதவு உடைந்திருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மதியழகன், உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் அலமாரியில் வைத்திருந்த 12 கிராம் தங்க நகை மற்றும் ரூ.35 ஆயிரம் பணம் ஆகியவை காணாமல் போயிருப்பது தெரியவந்தது.