×

கொரோனா தடுப்புக்கு ஆலோசனை மையத்தை தொடர்பு கொள்ளலாம்

ராமநாதபுரம், ஏப்.18:  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் ஆலோசனை பெற 24 மணி நேர உதவி மையம் செயல்படுகிறது என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஆலோசனைகள், விழிப்புணர்வு தகவல்கள், சந்தேகங்களுக்கு விளக்கம் பெற வசதியாக கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேர உதவி மையம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உதவி மையத்தில் சுகாதாரத்துறை சார்ந்த மருத்துவர்கள் குழு 8 மணி நேர சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இக்குழு அலுவலர்கள் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளோரை அலைபேசியில் தொடர்பு கொண்டு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் குறித்து கண்காணிக்கும் பணிகளை மேற்கொள்கின்றனர்.
பொதுமக்கள் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஆலோசனைகள், விழிப்புணர்வு தகவல்கள், சந்தேகங்களுக்கு விளக்கம் பெற இந்த உதவி மையத்தை 77087 11334, 77082 92732,  77083 57835, 77089 25833 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ