தொண்டி, ஏப்.18: கிழக்கு கடற்கரை சாலையில் நம்புதாளையிலிருந்து தொண்டி செல்லும் ரோட்டின் இருபுறமும் மணல் நிறைந்து காணப்படுவதால், டூவீலரில் செல்வோர்கள் அடிக்கடி விபத்தில் சிக்க நேரிடுகிறது. இருபுறமும் இருக்கும் மணலை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிழக்கு கடற்கரை சாலை நம்புதாளையில் இருந்து செக்போஸ்ட் வழியாக புது பஸ் ஸ்டாண்டு வரையிலும், ரோட்டில் இருபுறமும் மணல் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக செக்போஸ்ட் பகுதியில் அதிகமான மணல் காணப்படுகிறது. கனரக வாகனங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நேரங்களில் டூவீலரில் செல்பவர்கள் மணலில் சிக்கி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி சம்பவம் இப்பகுதியில் நடைபெறுவதால் ரோட்டின் இருபுறமும் இருக்கும் மணலை அகற்ற இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.