கராத்தேயில் மாணவர்கள் சாதனை

பரமக்குடி, ஏப்.18:  தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டியில் பள்ளி மாணவ,மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாநில அளவிலான தென்னிந்திய கராத்தே போட்டிகள் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடைபெற்றது. 10 வயது முதல் 21 வயதுக்குட்பட்ட மாணவ,மாணவிகளுக்கான லௌகீகம் போட்டியில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 45 பேர் பங்கேற்றனர். இதில் 12 வயது பிரிவில் கார்த்திக், யுவராஜ் ஆகியோரும் 13வயது பிரிவில் சபரி 14 வயது பிரிவில் கிஷோர், யோகேஷ் ஜீவானந்தம் ஆகியோரும், 21 வயது பிரிவில் சாய்நாத் முதல் பரிசை பெற்று பதக்கம் வென்றுள்ளார். அதேபோல் மாணவர் சபரிராஜன் கட்டா, குமுதே ஆகிய இரண்டு போட்டிகளிலும், மூன்றாம் பரிசையும், கார்த்திக் குமுதேவில் இரண்டாம் பரிசையும் பெற்றுள்ளனர்.

Related Stories: