ஒரே நாளில் 652 பேருக்கு கொரோனா

கோவை, ஏப். 18: கோவை மாவட்டத்தில் நேற்று புதிதாக 652 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 ஆயிரத்து 645 ஆக உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 58 வயது பெண் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதன் மூலம் கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 707 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 615 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர். கோவையில் இதுவரை 61 ஆயிரத்து 500 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 4 ஆயிரத்து 438 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Related Stories: