திருச்சி, ஏப். 17: திருச்சி சத்திரம் மேலசிந்தாமணி காவேரி நகரை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி ராஜலட்சுமி (36). டெய்லர் மற்றும் சின்னதிரை துணை நடிகை. இவருக்கு மகன், மகள் உள்ளனர். இதில் ராஜலட்சுமி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில ஆண்டாக கிராப்பட்டி, அன்பு நகரில் பெண்களுக்கான டெய்லரிங் கடை வைத்து நடத்தி வருகிறார். அப்போது திருச்சி மதுரை ரோடு எ.புதூர் காவல் நிலையம் அருகே வசித்து வந்த ரவுடி மவுலி (எ) சந்திரமவுலி (36) என்பவர் டெய்லரிங் கடை வழியே சென்று வருகையில் இருவருக்கிடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ராஜலட்சுயின் வீட்டு வாடகை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி வந்தார்.