பாபநாசம்,ஏப்.17: பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே அண்டக்குடி மெயின் சாலையில் பெட்டிகடை வைத்திருப்பவர் குருவம்மாள். இவரது வீட்டின் கீழ் கடை உள்ளது. நேற்று காலை மின்கசிவு காரணமாக கடையிலிருந்த மளிகை பொருட்கள் உள்பட எரிந்து சேதமானது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். சேத மதிப்பு ரூ.1 லட்சமாகும். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.