மின்தடையால் மக்கள் அவதி புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்2 செய்முறை தேர்வு துவக்கம் 13,000 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

புதுக்கோட்டை, ஏப்.17: புதுக்கோட்டையில் பிளஸ்2 செய்முறைத் தேர்வு நடைபெறும் மையங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நேரில் சென்று ஆய்வு செய்தார். புதுக்கோட்டையில் பிளஸ்2 செய்முறைத் தேர்வு நடைபெறும் மையங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி கூறியதாவது: பிளஸ்-2 செய்முறைத் தேர்வானது ஏப்ரல் 16ம் தேதி முதல் 23ம் தேதி வரை இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இத்தேர்வினை இயற்பியல், வேதியியல், உயிரியியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடு உள்ளிட்ட பாடப்பிரிவினர் எழுதுகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த தேர்வினை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர்.

பிளஸ்-2 செய்முறை தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கான கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி தேர்வுக்கூடங்கள்செய்முறைத்தேர்வு தொடங்குவதற்கு முன்பும், தேர்வு முடிந்த பின்பும்கிருமிநாசினி கொண்டு சுத்தம்செய்ய வேண்டும்.செய்முறை தேர்வு முடிந்ததும்அனைத்து சாதனங்களும்கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட வேண்டும். தேர்வுக்கு வரும்மாணவர்களை சமூக இடைவெளி விட்டு அமரச்செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும்தேர்வுக்கு எத்தனை மாணவர்களை பங்கேற்க செய்வது என்ற வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும்4 சதுர மீட்டர்தொலைவில்தேவையான சாதனங்கள்வைக்கப்பட்ட வேண்டும். தேவையான அளவிற்கு மாணவ, மாணவிகளுக்கு கிருமிநாசினி வழங்கப்பட வேண்டும். கிருமிநாசினி தீப்பற்றும்தன்மை கொண்டதாகும். எனவே எரியக்கூடிய சாதனங்களை கவனமுடன்கையாள வேண்டும்.

செய்முறை கூடத்தில்செய்முறை தேர்வு நடக்கும் போது கதவு ஜன்னல்களை கண்டிப்பாக திறந்து வைத்திருக்க வேண்டும். உள்காற்றை வெளியே தள்ளும்மின்விசிறியை ஓட விட்டிருக்க வேண்டும். உரிய காற்று வசதிகள்இருக்க வேண்டும்.

அனைத்து மாணவர்களும்ஊழியர்களும்உடல்வெப்ப நிலையை பரிசோதனை செய்த பிறகே பள்ளிக்குள்அனுமதிக்க வேண்டும். தேர்வு நடக்கும் போது மாணவர்கள், ஊழியர்கள்முகக்கவசம்அணிவது கட்டாய விதிகள்ஆகும். மாணவர்கள் சொந்தமாக கிருமிநாசினி, தண்ணீர்பாட்டில்கள்ஆகியவற்றை கொண்டு வர அனுமதிக்கலாம். ஒவ்வொரு மாணவரும்தேர்வு தொடங்குவதற்கு முன்பும், தேர்வு முடிந்ததற்கு பின்பும்கண்டிப்பாக கைகளை சுத்தம்செய்ய வேண்டும்.

ஆய்வுக்கூடத்தில்உள்ள எந்த ஒரு பொருளையும், வினாத்தாளையும்தொடுவதற்கு முன்பு கிருமிநாசினி பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஏற்கனவே தேர்வு நடந்து கொண்டிருக்கும்நிலையில்ஒவ்வொரு பிரிவு மாணவர்களும்காத்திருப்பதற்கு உரிய ஓய்வு அறைகளை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அந்த ஓய்வு அறைகளையும்ஒவ்வொரு பிரிவு மாணவர்கள்வருவதற்கு முன்பு கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். பாதுகாப்பான குடிநீர்தேர்வு மையத்திலும், ஓய்வு அறையிலும்வைத்திருக்க வேண்டும். கழிவறைகளை சிறந்த முறையில்சுத்தம்செய்து இருக்க வேண்டும். போதிய தண்ணீர்வசதிகள்செய்து இருக்க வேண்டும். மாணவர்கள்யாருக்காவது கொரோனா பாதிப்பு இருந்தால்அவர்களுக்கு மறுபடியும்தேர்வு நடத்தப்படும். மாணவர்களுக்கு காய்ச்சல், சளி இருந்தால்அவர்கள்திருப்பி அனுப்பப்படுவார்கள். அவர்களுக்கும்வேறு தேதியில்தேர்வு நடத்தப்படும் என்றார்.

Related Stories: