முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு புதுக்கோட்டையில் 47 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டை, ஏப்.17: புதுக்கோட்டை மாவட்டத்தில் 47 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கொரோனா தொற்று தற்போது வேகமாக பரவிவரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் தொற்று பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 47 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 410 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் 23 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரத்து 845 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு தற்போது 405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 160 ஆக உள்ளது.

Related Stories: