பரிசோதனைக்கு பயந்து பாளையில் மூதாட்டி தீக்குளிப்பு

நெல்லை, ஏப். 17: பாளை. கேடிசி நகர், கீழநத்தம் மேலூர் சண்முக விலாஸ் தெருவை சேர்ந்த சுப்பையா மனைவி கோமதி (74). கேடிசி நகரில் உள்ள சகோதாரர் துரை வீட்டில் வசித்து வருகிறார். கோமதியின் மகள் மகாலட்சுமி, கேடிசி நகர் டிடிசி காலனியில் வசித்து வருகிறார். இந்நிலையில் துரை உடல் நிலை பாதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து கோமதியையும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் தனக்கும் கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற அச்சத்தில் வீட்டில் யாரும் இல்லாத போது மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். மூதாட்டின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் மீட்டு படுகாயமடைந்த கோமதியை மீட்டு  நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதுகுறித்து பாளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: