2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

நெல்லை, ஏப்.17: இரு குழந்தைகளுடன்  இளம்பெண் மாயம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை முன்னீர்பள்ளம் அடுத்த  ஆரைகுளத்தைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி இளவரசி (31). இவர்களுக்கு  ஆயிஷா (8), சிபிஷா (6) இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் வீட்டில்  இருந்த இளவரசி கடந்த சில தினங்களுக்கு முன் தனது இரு குழந்தைகளுடன்  மாயமானார். உறவினர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் குறித்து  எந்த தகவலும் இல்லை.இதுதொடர்பாக அவரது கணவர் மனோகரன், முன்னீர்பள்ளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசார ணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: