சேந்தமங்கலம், ஏப்.17: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த பழனிவேல் தலைமையிலான குழுவினர் கடந்த 9ம் தேதி ஒரு வேனில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள அரப்பளீஸ்வரர் கோயிலுக்கு வந்தனர். வேனை திருக்கழுக்குன்றத்தைச சேர்ந்த டெல்லிபாபு(25) ஓட்டி வந்தார். மறுநாள்(10ம் தேதி) மதியம் எட்டுக்கை அம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து மாலையில் ஊருக்கு புறப்பட்டனர். கொல்லிமலை பிரதான மலைப்பாதையில், 11வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோர தடுப்புச்சுவர் மற்றும் பாறையில் மோதி கவிழ்ந்தது.