வாகனம் மோதி முதியவர் பலி

கிருஷ்ணகிரி, ஏப்.17: கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், குந்தாரப்பள்ளி அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், குருபரப்பள்ளி போலீசார் விரைந்து சென்று முதியவர் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஒரு வழக்குப்பதிந்து அந்த முதியவர் யார் என்றும், மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: