காரிமங்கலம், ஏப்.17:தர்மபுரி- கிருஷ்ணகிரி சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை பிரிவு ரோடுகளில் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளாமல், நான்கு வழி சாலையாக அமைத்துவிட்டனர். குறிப்பாக மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி, கெரகோடஅள்ளி, காரிமங்கலம், அகரம் பிரிவு சாலை ஆகிய பகுதிகளில் மேம்பாலம் இல்லாததால், இப்பகுதிகள் விபத்து நடக்கும் பகுதிகளாகவே மாறிவிட்டது. குறிப்பாக காரிமங்கலம் அகரம் பிரிவு சாலையில், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களில் அடிபட்டு, அப்பாவி மக்கள் தொடர்ந்து உயிரிழப்பது நடந்து வருகிறது.