×

பெட்ரோல் பங்கில் தீக்குளித்த கூலித் தொழிலாளி பலி

சிவகாசி, ஏப். 17: சிவகாசி அருகே திருத்தங்கல் சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (34). இவர் நேற்று மாலை சிவகாசி காரனேசன் பஸ் நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு வந்து, வாட்டர் கேனில் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினார். அங்குள்ள பாத்ரூம் சென்றவர், தன் மீது பெட்ரோலை ஊற்றி திடீரென தீ வைத்துக் கொண்டார். அதை பார்த்த பங்க் ஊழியர் வினோத்குமார் (24) , கண்ணனை காப்பாற்ற முயன்றார். இதில் வினோத்குமார் காயமடைந்தார். காயமடைந்த இருவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார். சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீஸ் விசாரணையில், கண்ணனுக்கும் அவரது மனைவிக்கும் குடும்பத் தகராறு இருந்துள்ளது. இதனால் விரக்தி அடைந்த கண்ணன் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...